ரஜனியின் நரித்தனம்


பேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள். பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவே இன்னொன்றையும் பகிர்ந்திருந்தார்கள் அவரை ரஜனி தன் தத்து தந்தையாக ஏற்றுள்ளார் என்று.இணையத்தில் தேடியதில்  பாலம் கல்யாண சுந்தரம் பற்றிக் கிடைத்த தகவல்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் மனம்போல தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவுவதில், தான் சம்பாதித்த பணத்தை மற்றவருக்கு கொடுத்து உதவும் "தர்மவான்" திரு. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இவரைப் பற்றி......


இவரின் சொந்த ஊர் ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கருவேலங்குளம். இவரது தந்தை பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. இவர்



* "பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.



* கற்பனை செய்துகூட பார்க்கவியலாத கனவு மனிதராக காணப்படுகிறார்.



* தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்காக தந்தவர்.



அமெரிக்கா வழங்கிய 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தவர்.



* ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து அதன் வருமானத்தை மற்ற நற்பணிகளுக்காக கொடுத்தவர்.



* சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். தன்னை சந்திக்க வரும் அறிஞர் பெருமக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய அறையில் தங்கி உள்ளார்.



இவருடைய பொது சேவைகள்



1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்



2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்



3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.



4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.



பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்)



தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.



மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தாலல் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.



இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.



கல்வியில் ஒரு நாடு தன்னிறைவு பெற்றால் எல்லா வளங்களும்தானே வந்து சேரும். இது அரசு ஊழியர்களின் காதில் ஏறுமா?



இவரை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தை தெரிந்து கொள்ளலாமா?



மாண்புமிகு டாக்டர் சா. ஜெகத்ரட்சன் எம்.ஏ., டி. லிட்.,



பாலம் ஐயா அவர்களை போல் ஒரு மனிதரை காண்பது அரிது. அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன். சாதனையாளர்களின் சாதனையாளர் அவர்.



பாரத ரத்னா ஏ.பி. ஜே. அப்துல்கலாம், முன்னாள் குடியரசு தலைவர்



தன்னலம் இல்லாமல் வாழ்வது சிறப்பான பெருவாழ்வாகும். இறைவன் பா. கல்யாண சுந்தரத்திற்கு அந்த அரும்பெறும் வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். அவர் நிழலில் பலர் சிறப்படைந்துள்ளனர்.



பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள் - (1-5-1963)



இந்தியாவிலே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளித்த முதல் மாணவன் என்ற வகையில் நமது நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு தங்கம் வழங்கிய மாணவர் கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.



ஆளுநர் பாத்திமா பீவி (முன்னாள் தமிழக ஆளுநர்) (15.8.99)



நீதி மிகுந்த உங்கள் வாழ்க்கை மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.



 கலைஞர்:(முன்னாள் தமிழக முதல்வர்)



அறிவு பரப்பும் ஆக்க பணியில் அயராது உழைக்கும் திரு கல்யாண சுந்தரனாரின் கடமை உணர்வு பாராட்டுதற்குரியது.



நீதிபதி நடராஜன் (உச்சநீதிமன்ற நீதிபதி) (ஓய்வு)



நல்ல தலைமை பண்புகளுடன் ஏராளமான இளைஞர்களையும் மாணவ மாணவிகளையும் ஒருங்கினைத்து பா. க., செய்து வரும் சேவைகள் நிச்சயம் ஒரு சமுதாய மாறுதலை எற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.



நீதிபதி மோகன் (உச்ச நீதிமன்ற நீதிபதி) - (ஓய்வு)



பிறப்பாலே தமிழன், தொழிலால் கொடை வள்ளல், இமயம் போன்ற உயர்ந்த உள்ளம் கொண்ட கல்யாண சுந்தரம் 21ம் நூற்றாண்டின் சாதனை சக்கரவர்த்தி என்றால் மிகையல்ல.



இப்படி பல அறிஞர் நீதியரசர்கள், அரும்பெரும் தலைவர்களால் பாராட்டு பெற்ற போதும், மிகவும் எளிமையாக, அடக்கமாக, ஊருக்கு உழைக்கும் உத்தமனாக, உயர்ந்து மற்றவருக்கு பாடமாக வாழும் பா. கல்யாண சுந்தரம் அவர்களை வாழ்த்துவோம்.

http://unmaichudum.blogspot.com



ரஜினியின் தத்து தந்தை"


இவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவிர்கள்.



இவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் 

செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே சம்பாதித்த அணைத்து பணத்தையும் சமூக சேவைக்கு வழங்கிய முதல் நபர் இவர் தான். 


மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர். 



நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்



அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர்.



இவரை பாராட்டி ஐ நா சபை "one of the Outstanding People of the 20th Century " என்ற பட்டமளித்து கவரவித்துள்ளது. அமெரிக்கா இவருக்கு "Man of the Millennium " என்று பட்டமும் 30 கோடி பரிசு பணமும் வழங்கியது அந்த 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து விட்டார். 



இவருடைய பொது சேவைகள்



1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்



2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்



3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.



4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.



இவரை பற்றி கேள்வி பட்ட நம் தலைவர் என்ன செய்தார் தெரியுமா? 



சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி சிறிய அறையில் தங்கியிருக்கிறார்.



தான் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் வெளிய சொல்லாத நம் தலைவர், இதையும் வெளிய சொல்ல வில்லை, பின்னர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களே ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்.



நிருபர் : “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?”



ஐயா : ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!”



நிருபர் : “உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்”



ஐயா : “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?”



நிருபர் : “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்”



ஐயா : “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது”



நிருபர் : “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!” 



ஐயா : “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே. நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!"



நிருபர் : வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்



ஐயா : "தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்."



நிருபர் : “என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?”



ஐயா : “உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!”



இவர்தான் திரு. பாலம் கல்யாண சுந்தரம்.



பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்) :



தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.



மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தால் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.



இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.



இவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். நம் தலைவரின் மனதும் அவரது நற்பண்புகளும் நமக்கு தெரிந்ததே அனால் இவரை போன்ற சூப்பர் ஸ்டார்கள் தெரியாமலே சென்று விடுகிறார்கள், அவரை நாம் இங்கு நம் தலைவர் சார்பாக, அவரின் தத்து தந்தையை கவுரவிப்போம்

http://eluthu.com
Mr.Kalayanasundaram worked as a Librarian for 30 years. Every month in his 30 year experience(service), he donated his entire salary to help the needy. He worked as a server in a hotel to meet his needs. He donated even his pension amount o
f about TEN(10) Lakh rupees to the needy.

He is the first person in the world to spend the entire earnings for a social cause. In recognition to his service, (UNO)United Nations Organisation adjudged him as one of the Outstanding People of the 20th Century.. An American organisation honored him with the ‘Man of the Millennium’ award. He received a sum of Rs 30 cores as part of this award which he distributed entirely for the needy as usual.

இதில எனக்கு கோபம் வந்தது ரஜனியில்தான் ஏன் ரஜனிக்கிந்த வேண்டாத வேலை

ரஜனியை வன்மையாகக்கண்டிக்கிறேன் சிவகாசி வெடிவிபத்து,தானே புயல் என்று பல விடயங்கள் நடக்க அற்பத்தொகையைக்கொடுத்து விட்டு வாழ் நாள் முழுவதும் ஏழைகளுக்கு உழைத்த ஒருவரை தன் வீட்டுக்கு அழைத்து விளம்பரத்தை தேடிக்கொள்கிறாரா?கல்யாணசுந்தரத்தை தந்தையாக்க பல ஏழைக்குடில்கள் காத்துக்கிடக்கின்றன..ரஜனி தந்தையாக்க தேவையில்லை கல்யாணசுந்தரம் 30 கோடியை கொடுத்தார் ரஜனி என்ன கொடுத்தார் சாதாரண மனிதனுக்கு 30 கோடி என்பதும் ரஜனிக்கு 30 கோடி என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு..தயவு செய்து கல்யாணசுந்தரம் என்ற மனிதனை அவமானப்படுத்தாதீர்கள்.எந்த ஒரு மனிதனும் வாழ் நாளில் எடுக்காத முடிவை எடுத்திருக்கிறார் கல்யாண சுந்தரம் அதற்குப்பாராட்டு தெரிவித்துக்கொள்ளலுடன் நிறுத்திக்கொள்ளலாம் இதென்ன ராவன் படமா வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்துவிட கல்யாண சுந்தரம் செய்தவேலைக்கு ரஜனி அவரது வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்திருந்தாலாவது ரஜனியில் மரியாதை வந்திருக்கும்.
இனி தலைவரின் விசிறிகள் தலைவரின் நல்ல மனதைப்பார் என்று பொரிந்து தள்ளுமே தவிர கல்யாண சுந்தரம் அவர்கள் கண்ணுக்கு தெரியப்போவதில்லை இதைத்தானே ரஜனியும் ஆசைப்பட்டார்.அரசியலுக்கு வரவேண்டும் என்று இப்பொழுதே ரெயினிங்கை ஆரம்பித்துவிட்டாரா?


கல்யாண சுந்தரம் என்ற ஒப்பற்ற மனிதரை ரஜனி போன்றவர்களுடன் தொடர்பு படுத்தி தயவு செய்து அவமானப்படுத்தாதீர்கள்..ரஜனிக்கு பூப்போடுவதற்குப்பதில் கல்யாணசுந்தரத்திற்குப் பூப்போட்டால் குடும்பம் விளங்கும்யா...கல்யாண சுந்தரம் ஐயா அவர்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்....


எனது பதிவில் நான் கூறியது தவறு என்பதற்கான சரியான காரணத்தை  நீங்கள் கூறினால் நான் மன்னிப்புக்கேட்கத்தயார்


10 கருத்துகள்

  1. கலியாண சுந்தரம் இரஜனியில் அழைப்பை நோ தேங்க்ஸ் என்று முதலிலேயே நிராகரித்து இருக்கவேண்டும். ஏன் செய்யவில்லை? ஒரு குறுக்குவழியில் மக்களின் சிந்தனையை மழுங்கடித்து பெரு முதலாளிகள் வாழ சேவை செய்யும் இரஜனியிடம் இவருக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரஜனியில் அழைப்பை நோ தேங்க்ஸ் என்று முதலிலேயே நிராகரித்து இருக்கவேண்டும்....ம்ம் உள் நோக்கம் என்னவென்று தெரியாததால் சென்றுவிட்டார்..யாராவது வீட்டிற்கு வரும்படி அழைத்தால் செல்வதில் தவறில்லை என்று நினைக்கின்றேன்

      நீக்கு
  2. //இவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். //

    ரஜினி மூலமாக பலருக்கு தெரிய வந்து இருக்கிறார். ஓகே

    //இதில எனக்கு கோபம் வந்தது ரஜனியில்தான் ஏன் ரஜனிக்கிந்த வேண்டாத வேலை
    ரஜனியை வன்மையாகக்கண்டிக்கிறேன் சிவகாசி வெடிவிபத்து,தானே புயல் என்று பல விடயங்கள் நடக்க அற்பத்தொகையைக்கொடுத்து விட்டு வாழ் நாள் முழுவதும் ஏழைகளுக்கு உழைத்த ஒருவரை தன் வீட்டுக்கு அழைத்து விளம்பரத்தை தேடிக்கொள்கிறாரா?//

    புரியல.. ரஜினிக்கு இதன் மூலம் விளம்பரம் அவர் வழங்கினாரா?


    //சிவகாசி வெடிவிபத்து,தானே புயல்/

    இந்த பதிவுக்கு அல்ல மச்சி இது இந்த சம்பவம் குறித்த பொது கருத்தே..

    இது முட்டாள் ரசிகனின் வேண்டுகோள் போலவே இருக்கு.. காரணம் நடிகன் காசுக்கு நடிப்பவர்.. நடிப்பவன் கொடுக்க வேண்டும் என்று ஏதாச்சும்? இருந்தா சொல்லிடுங்க.. நன்மை செய்தா ஓகே.. செய்யனும்னு என்னங்க அவசியம்..

    http://www.sandiyarkaran.com/2012/11/SivakasiWelfare2012.html இந்த பதிவில் கமல் செய்த விடயங்கள் போட்ருக்காங்க.. ரஜினி, விஜய், அஜித் பற்றி சொல்லவே தேவை இல்லை பல தளங்களில் காணலாம்..

    என்னை பொறுத்த வரை ஒரே கேள்வி தான் நடிகனிடம் ஏன் இதை எல்லாம் எதிர் பார்கிறீர்கள்? (செய்தால் ஓகே செய்யா விட்டா ஏன் விமர்சனம்.. ஆழமாக யோசித்து பார்த்தால் நம்மை அறியாமல் முட்டாள் தனமே மிஞ்சுகிறது)

    அப்போ ஓட்டு போட்டு மக்கள் தெரிந்து கொண்ட அரசாங்கத்தின் வேலை என்ன?

    சரி பதிவுக்குள் வந்தால்

    இதில் நடிகனை விமர்சிக்கிறதுக்கு என்னங்க இருக்கு? உங்கள் கருத்தை தவிர்த்து நடந்த சந்தர்பத்தை நோக்கும் போது நீங்க ரொம்ப ஓவரா feel பண்ணிடிங்களோ என்று தோணுது..


    நடிகனுக்காக இந்த பதிவில் வக்காலத்து வாங்கும் என் தலை பின்னாலும் "முட்டாள்" பல்ப் பளிச் பளிச் என்று எரிந்து கொண்டு இருக்கிறது


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினி மூலமாக பலருக்கு தெரிய வந்து இருக்கிறார். ஓகே//இத்தான் தவறெங்கின்றேன் இப்படிப்பட்ட ஒருவரை எமக்கு ஒரு நடிகர் மூலம்தான் தெரியவருகின்றது என்பதே கேவலம் தான்..// என்னை பொறுத்த வரை ரஜினி இந்த இடத்தில வராவிட்டால் நீங்கள் இதை பற்றி எழுத சந்தர்ப்பம் குறைவே.. ரஜினி தந்தையாக தெரிந்த பின்னே நீங்கள் தேடியாதாக சொன்னீர்கள்..// மன்னிக்க ரஜனி தந்தையாக்கினார் என்ற விடயம் எனக்கு கிடைப்பதற்கு முன்பாகவே ஆங்கில பேஜ் ஒன்றில் கல்யாண சுந்தரத்தைப்பற்றி அறிந்துவிட்டேன்..பின்னர் அண்மையில் ஆங்கிலத்தில் இதைப்பற்றி ஸ்ரேட்டஸ் வந்தது அதில்தான் ரஜனி பற்றி தெரிந்தது...பின்னர் அது தொடர்பான விடயங்களை தமிழில் தேடினேன்
      புரியல.. ரஜினிக்கு இதன் மூலம் விளம்பரம் அவர் வழங்கினாரா?//
      ரசிகன் என்பதை விட்டுவிட்டு வெளியில் இருந்து பார்த்தால் தெரியும் சகோ...
      ரஜனி கல்யாணசுந்தரத்தை தன் தந்தையாக ஏற்றுக்கொண்டார் என்ற செய்திவெளிவந்ததும் ரசிகர் பட்டாளங்கள் தலைவா என்ன நல்ல மனசென்று அவரை இன்னும் தூக்கிப்பிடிக்கும்...ஆனால் கல்யாண சுந்தரத்தை அவர்களுக்குத்தெரியாது..இதற்கு ஆசைப்பட்டுத்தான் ரஜனியும் இதை செய்ததாக எனக்குத்தெரிகின்றது..அது ஈடேறிவிட்டது என்பது வேறுகதை...
      அப்துல்கலாம் எல்லாம் வாழ்த்துத்தானே சொன்னார் இவர் அத்துடன் நிறுத்தியிருக்கலாம் அல்லது இவரே நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்திருக்கலாம்..அல்லது கல்யாண சுந்தரம் ஐயா உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தாரே என்ற விடயம் அவருக்கு உறைத்து அந்த நலனுக்கு தான் ஏதாவது கொடுத்திருக்கலாம்
      //உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி//
      அவரை பணத்திற்கு அடிமைப்படுத்த முயல்வது மாதிரி தெரிகின்றது நேரே விலை போவது மாதிரி தெரிகின்றது.கல்யாண சுந்தரத்தை வசதியாக வைத்திருந்து எந்தப்பிரயோசனமும் இல்லை கல்யாணசுந்தரம் ஐயா எதற்காக எல்லா தியாகங்களையும் செய்தாரோ அதற்கு ரஜனி பணத்தை செலவழிக்க முன் வந்திருக்கவேண்டுமே தவிர கல்யாண சுந்தரம் ஐயாஅவரகளை எதற்காக வசதியாக வைத்துக்கொள்ள ஆசைப்படவேண்டும்?

      கமலை நான் மதிக்கும் சில காரணங்களில் ஒன்று முதல் முதலில் ரசிகர் மன்றத்தை நற்பணிமன்றமாக எனக்கு செலவழிக்காதே மக்களுக்கு செல்வழி என்று மாற்றியது..இரத்ததானம் உடல் தானம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது போன்றவை...

      நீக்கு
    2. நடிகர்கள் எதற்காக பணம் வழங்கவேண்டும்?
      தமது படங்களில் அனியாயத்தை எதிர்ப்பவணாக ஏழைகளின் காவல் தெய்வமாகவும் காட்டிக்கொள்பவர்கள் நடிகர்கள் அதனால்தான் ரசிகர்கள் நடிகர்களுக்கு உருவாகின்றார்கள் குறிப்பாக தலைவா என்று கத்தும் தலைவா என்ற வார்த்தையை அதற்குரிய தகுதியிடன் அழைத்து கூப்பிட்டு பூப்போடுவது அதற்குத்தான்..வெறும் என்ரெரெயிந்தான் காரணமல்ல என்ரெர்ரெயின்தான் அதற்குக்காரணமாக இருந்தால் நகைச்சுவை நடிகருக்கும் இதே தலைவா மரியாதை கிடைத்திருக்கும்...ஒருவன் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப்பெறலாம்..நடிகர்கள் பெறும் ஊதியம் உழைப்புக்கேற்றதல்ல..ஒட்டு மொத்த டீமிற்குக்கிடைக்கவேண்டிய ஊதியம் வெறும் காட்சி பொம்மைகள்தான் நடிகர்கள் அவர்கள் பறந்து பறந்து அடிப்பது முதற்கொண்டு பல விடயங்களை அவர்களால் தனியே செய்யமுடியாது...எனவே மக்களின் முட்டாள்தனத்தை பயன்படுத்தி உழைபப்வர்கள் அதை அவர்களுக்கே கொடுத்தால் குறைந்துவிட மாட்டார்கள்..அதோடு ரஜனி சற்று ஸ்பெஸல் சிவாஜி படத்தில் பணக்காரணிடம் புடுங்கி ஏழைகளுக்குக்கொடுபபர்...அரசியலுக்கு வரப்போகின்றார் நமது தலைவர் அவர் அரசியலுக்கு வந்தால் நாடே ஆட்டங்காஅணும் என்று கூறுபவர்கள் சிந்திக்கவேண்டும்.

      ஒரு தடையுமில்லாது கூட்டணி பிரிந்துவிடுமோ எதிர்க்கட்சிகள் என்னசெய்யுமோ என்று எந்த தடையுமில்லாது தன் பாக்கேட்டில் இருந்து பணம் கொடுக்க முடிந்த காலத்திலெயே எனக்கென்ன என்று இருக்கும் இவரை எந்த தைரியத்தில் அரசியலுக்கு வந்து நாட்டைத்திருத்துவார் என்று நம்புகின்றீர்கள்

      நீக்கு
  3. //எனது பதிவில் நான் கூறியது தவறு என்பதற்கான சரியான காரணத்தை நீங்கள் கூறினால் நான் மன்னிப்புக்கேட்கத்தயார்
    //

    இதற்க்கு பதிலாக நடந்த சந்தர்பத்தை எழுதி விட்டு கருத்தை கேட்டு இருக்கலாம்.. வித்தியாசமான கருத்துக்கள் கிடைத்து இருக்கும்.. நான் இதை நேர் எதிராகவே பார்க்கிறேன். என்னை பொறுத்த வரை ரஜினி இந்த இடத்தில வராவிட்டால் நீங்கள் இதை பற்றி எழுத சந்தர்ப்பம் குறைவே.. ரஜினி தந்தையாக தெரிந்த பின்னே நீங்கள் தேடியாதாக சொன்னீர்கள்.. இதுவே அதற்க்கு சாட்சி.. உங்க மனதளவில் நீங்களே ரொம்ப முரண்பட்டு பதிவேளுதிய போல இருக்கு தல.. யோசிச்சு பாருங்க..

    பதிலளிநீக்கு
  4. பால் தாக்ரே இறந்த சோகத்தில் ரஜினி இருக்கையில் இந்த பதிவு அவருடைய அல்லக்கைகளுக்கு மிகுந்த சோகத்தையும் கோபத்தையும் கொடுக்கும். தலைவன் சோகத்தில் இருக்கான் என்று பல அல்லக்கைகள் துக்க தினம் அனுசஷ்க்கின்றனவாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜனி பால் தாக்ரே மரணத்தால் கவலைப்பட்டுள்ளார் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியும் இந்தக்கூத்துவேற நடக்குதா? என்ன கொடுமை

      நீக்கு
  5. மதிப்புக்குரிய கல்யாணசுந்தரம் அவர்களை பற்றி எனக்கு முன்பும் தெரியாது ரஜினி தத்து எடுத்த பின்பும் தெரியாது (நான் அல்லக்கைகளின் வலைப்பக்கம் போவதில்லை)
    நீங்கள் பதிவு போட்ட பின்பே அவரை பற்றி தெரிந்து கொண்டேன். ரஜினி சுந்தரம் ஐயாவை தத்து எடுத்ததன் நோக்கம் என்ன?
    ஐயா வறுமையில் இயலாமையில் நடுத்தெருவில் நிற்க்கவில்லை. தானே உழைத்து மற்றவர்களுக்கும் உதவும் நிலையில் இருந்துள்ளார். இப்படிபட்டவரை தத்து எடுத்து வீட்டில் வைப்பதன் நோக்கம் என்ன? விளம்பரம் தான்.

    அவரை கௌரவிக்கும் நோக்கம் இருந்தால் அவரின் புனித பணிக்கு நிதிஉதவி செய்து மேலும் அவர் பணியை மேம்பட செய்திருக்கலாம். ஆனால் அப்படி ஏதாவது நடந்ததா?????

    காட்டில் நின்ற சிங்கத்தை பிடித்து அடைத்து வைத்து கொண்டு மிருகாபிமானம் பேசுவது போன்று உள்ளது ரஜினி செயல்.
    "ரஜினி மூலம் ஒருவர் தெரிய வந்திருக்கிறார்" இதனால் அந்த சுந்தரம் ஐயாவுக்கு எந்த பலன். அவர் உதவிகள், நற்பணிகள் செய்யும் பொது விளம்பரத்துக்காகவோ அல்லது பிரபல்யத்துக்காகவோ செய்யவில்லை. இப்போ அவரை பலர் அறிந்து விட்டதால் அவர் மகிழ்ச்சி அடைய மாட்டார். அதே வேளை இதனால் அவர் பணிக்கு ஏதாவது புதிதாக உதவி கிடைத்தால் நல்லது. அப்படியும் நடக்கவில்லை. பிறகு என்ன பலன் ரஜினியால்.!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வறுமையில் இயலாமையில் நடுத்தெருவில் நிற்க்கவில்லை. தானே உழைத்து மற்றவர்களுக்கும் உதவும் நிலையில் இருந்துள்ளார்./// நல்ல சாட்டையடி

      அவரை கௌரவிக்கும் நோக்கம் இருந்தால் அவரின் புனித பணிக்கு நிதிஉதவி செய்து மேலும் அவர் பணியை மேம்பட செய்திருக்கலாம். ஆனால் அப்படி ஏதாவது நடந்ததா?????
      //உண்மை

      காட்டில் நின்ற சிங்கத்தை பிடித்து அடைத்து வைத்து கொண்டு மிருகாபிமானம் பேசுவது போன்று உள்ளது ரஜினி செயல்.
      "ரஜினி மூலம் ஒருவர் தெரிய வந்திருக்கிறார்" இதனால் அந்த சுந்தரம் ஐயாவுக்கு எந்த பலன். அவர் உதவிகள், நற்பணிகள் செய்யும் பொது விளம்பரத்துக்காகவோ அல்லது பிரபல்யத்துக்காகவோ செய்யவில்லை. இப்போ அவரை பலர் அறிந்து விட்டதால் அவர் மகிழ்ச்சி அடைய மாட்டார். அதே வேளை இதனால் அவர் பணிக்கு ஏதாவது புதிதாக உதவி கிடைத்தால் நல்லது. அப்படியும் நடக்கவில்லை. பிறகு என்ன பலன் ரஜினியால்.!

      கருத்துக்கு மிக்க நன்றிகள்

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை